பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

எப்போதும் துணிச்சலுடன் கருத்துகளை வெளியிடுகிறவர் கங்கனா ரணாவத். அவர் வெளியிடும் கருத்துகள் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் கருத்துகளோடு ஒத்து போவதால் அவரை பா.ஜ.,வின் ஆதரவாளர் என்ற கருத்தும் உண்டு. அதோடு மஹாராஷ்ராவில் ஆளும் சிவசேனா கட்சி மீது துணிச்சலான விமர்சனங்களை முன்வைத்தவர். மும்பைக்குள் நுழைய விட மாட்டோம் என்று அரசியல் கட்சிகள் மிரட்டியபோது அதை மீறி கெத்தாக வந்து இறங்கியவர்.
இந்த நிலையில் வருகிற பார்லிமென்ட் தேர்தலில் அவர் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் சாத்தியகூறுகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. காரணம் கடந்த தேர்தலின்போதே அவரை தேர்தலில் நிறுத்த பாரதிய ஜனதா கட்சி முயற்சித்தது. அவர்தான் பிடிவாதமாக மறுத்து விட்டார். ஆனால் இந்த முறை போட்டியிடும் எண்ணத்தில் இருக்கிறார். அதனை தற்போது வெளிப்படுத்தி உள்ளார்.
குஜராத்தில் உள்ள சோமநாத் கோயிலுக்குச் சென்ற அவர் அங்கு சாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கு அவரை சந்தித்த செய்தியாளர்கள் வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிடப்போவதாக கூறப்படுகிறதே? என்று கேட்டனர். அதற்கு அவர் “கிருஷ்ணர் அருள் புரிந்தால் லோக்சபா தேர்தலில் போட்டியிடுவேன்” என்று பதிலளித்தார்.
அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர் “பா.ஜ., அரசின் முயற்சியால் 600 ஆண்டு கால போராட்டத்துக்குப் பிறகு மகத்தான நாளை காணப் போகிறோம். கொண்டாட்டங்களுடன் கோயில் திறப்பு விழா நடைபெறும். சனாதன தர்மத்தின் கொடி உலகம் முழுவதும் பறக்க வேண்டும். துவாரகை ஒரு தெய்வீக நகரம். இங்குள்ள அனைத்தும் அற்புதம். ஒவ்வொரு துகளிலும் கிருஷ்ணர் இருக்கிறார். அவரைக் காணும்போது நான் ஆசீர்வதிக்கப்படுகிறேன். இறைவனை தரிசனம் செய்ய நான் எப்போதும் இங்கு வர விரும்புகிறேன், என்றார். கங்கனா அவரது சொந்த மாநிலமான இமாச்சல பிரதேசத்தில் போட்டியிடலாம் என்று தெரிகிறது.




